2012 ஆம் ஆண்டு கல்கிசை கல்தமுல்ல பிரதேச வீடொன்றில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்த கணவர் தொடர்பான செய்தி சமூகத்தினுள் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சந்தேகத்துக்குரியவர் தொடர்பாக 31 வருடமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மை இன்று வெளியானது.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் கல்கிசை பிரதான நீதவான் நிரோஷா பிரணாந்து முன்னிலையில் இடம் பெற்றது.
கொலை செய்த சந்தேகத்துக்குரிய விஜேமுனி மதுரங்க இன்று நீதிமன்றில் முன்னிலையானார்.
இதுதவிர, அவரது தாயாரும் வீட்டு வேலையாளியும் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது, எவரும் எதிர்பாராத கருத்தொன்றை சந்தேகத்துக்குரிய விஜேமுனி மதுரங்கவின் தாயார் வெளியிட்டார்.
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை தீயிட்டு கொலை செய்தவர் தமது வயிற்றில் பிறந்த பிள்ளை அல்லவென குறிப்பிட்டார்.
சிறு வயது முதல் தாம் எடுத்து வளர்த்த பிள்ளை என சந்தேகத்துக்குரியவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
இதனை தாம் 31 வருடங்களாக மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, விஜேமுனி மதுரங்கவின் மனைவி மற்றும் இரண்டு பி;ள்ளைகள் எரியுண்டதை தாம் நேரில் கண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, விஜேமுனி மதுரங்க எனப்படும் சந்தேகத்துக்குரியவர் காவற்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் படி கள்ளத் தொடர்புடைய காதலியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் இந்த கொலைகளை செய்ததாக தெரியவந்துள்ளது.