பாதுகாப்புத்துறையினர் என தெரிவித்து சிலர் அனாமதேய தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு தமிழ் வர்த்தகர்கள் மற்றும் பிரமுகர்களிடம் இருந்து கப்பம் கோருவதாக முறையிடப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களிடம் தொலைபேசியின் ஊடாக கப்பம் கோரப்படுவதாக தம்மிடம் முறையிடப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விபரங்களுடன் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் இணைந்து கொள்கிறார்.
[MP3]t52125[/MP3]