சிரியாவில் இடம்பெற்று வருகின்ற தொடர்சியான மோதல்களை தவிர்க்கும் பொருட்டு, அந்த நாட்டு அரசாங்கத்துக்கும் - எதிர்கட்சியினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைக நடத்த ரஷ்யா முன்வந்துள்ளது.
ரஷ்யாவும் - அரபு லீக்கும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளன.
சிரியாவில் தற்போது வன்முறைகள் எல்லைகளை கடந்து இடம்பெறுவதாக ரஷ்யாவின் வெளிவிவகார அமச்சர் சேர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இதில் சாத்தியப்படக்கூடிய தீர்வு ஒன்று தொடர்பில், தொடர்சியான பேச்சுவாhர்த்தைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.