பாப்பாண்டவர் டுவிட்டரிலிருந்தும் விலகுகிறார்.

Sunday, 24 February 2013 - 20:30

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.


உலக கத்தோலிக்க மக்களின் ஆன்மீக தலைவராக செயற்பட்ட பாப்பாண்டவர் பதினாறாம் ஆசீர்வாதப்பர் எதிர்வரும் 28ம் திகதி தனது பதவியிலிருந்து விலகவுள்ளநிலையில் கையோடு ட்விட்டரில் இருந்தும் விலகவுள்ளார்.
85 வயதான பாப்பாண்டவரான பதினாறாம் ஆசீர்வாதப்பர் உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
அவர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் இணைந்து கொண்டார்.
இரண்டரை மாதத்திற்குள் அவருக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்பற்றாளர்கள் இணைந்து கொண்டனர்.
ஆங்கிலத்தில் 15 லட்சம் பேரும், ஸ்பானிஷில் 7 லட்சம் பேரும், இத்தாலிய மொழியில் 3 லட்சத்து 35 ஆயிரம் ட்விட்டரில் பாப்பாண்டவரை பின்பற்றுகின்றனர்.
இதுதவிர, சுமார் 22 ஆயிரத்து 500 பேர் அவரை லத்தீன மொழியில் பின்பற்றுகின்றனர்.
இந்தநிலையில் எதிர்வரும் 28 ம் திகதி தனது பதவியிருந்து விலகும் தருணத்தில் ட்விட்டர் கணக்கையும் நிறுத்துகிறார் என்று வாடிகன் ரேடியோ தெரிவித்துள்ளது.