தப்பிய அகதி கைது

Sunday, 03 March 2013 - 12:58

+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

தமிழகம் - செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கைக்கு தப்பி வர முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குணராஜ் என்ற 43 வயதுடைய அவர், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மேலும் 37 இலங்கையர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த மாதம் 20ம் திகதி காலில் வலி ஏற்பட்டதாக தெரிவித்த நிலையில் அவர் செங்கல்பட்டு மருத்து மனைக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் ஏற்கனவே புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நண்பர்களான இரண்டு தமிழகத்தை சேர்ந்தவர்களுடன், செங்கல்பட்டு வைத்தியசாலையில் இருந்து தப்பி, ரமேஸ்வரம் பகுதியை அடைந்துள்ளார்.

நேற்றைய தினம் அவர் அவர் ராமேஸ்வரம் தோண்டி பகுதி ஊடாக இலங்கைக்கு தப்பி செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் இவ்வாறு ஏற்கனவே இரண்டு தடவைகள் சிறையில் இருந்து தப்ப முயற்சித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அவருக்கு உதவி செய்த இரண்டு நண்பர்களும் கைதாகியுள்ளனர்.