மஹேல ஜயவர்த்தன கைச்சாத்திடவில்லை

Monday, 04 March 2013 - 19:54

%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2+%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88

இலங்கை கிரிக்கட் அணியின் உறுப்பினர்கள் அனைவரும் தமது வருடாந்தர உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த தகவலை, ஸ்ரீலங்கா கிரிக்கட் வெளியிட்டுள்ளது.

இலங்கை தேசிய அணியில் அங்கத்துவம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

எனினும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன மாத்திரம் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.

வெளிநாட்டிற்கான விஜயம் ஒன்றை அவர் மேற்கொண்டுள்ளதன் காரணமாகவே குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.