சிரியாவில் சிறைபிடிக்கப்பட்ட 21 பிலிபின்ஸ் பிரஜைகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களாக செயற்பட்டு வந்த அவர்கள் நேற்றைய தினம் சிரியாவின் போராளிகளால் கடத்தப்பட்டனர்.
அவர்கள் தற்போது கொலன் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இஷ்ரேலுக்கும் - சிரியாவுக்கும் இடையிலான மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்குளை உடன்டியாக விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என்று பிலிபின்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.