ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று முற்பகல் டோக்கியோ ஹனேடா வானூர்தி தளத்தை சென்றடைந்தார்.
இதன்போது ஜனாதிபதியை ஜப்பான் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் மினோரு கியுஜ் மற்றும் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் எட்மிரல் வசந்த கருணாகொட ஆகியோர் வரவேற்றனர்.
ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி அந்த நாட்டின் பிரதமர் சின்சோ அபேவுடன் கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழிற்சாலை தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.