வவுனியா கோட்ட மட்ட எல்லே போட்டி முடிவுகளின் படி ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தை வவுனியா இந்துக்கல்லூரியும் இரண்டாமிடத்தினை கணேசபுரம் விநாயகர் வித்தியாலயமும் மூன்றாமிடத்தை பூந்தோட்டம் மகா வித்தியாலயமும் பெற்றுள்ளதாக கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி. நடராஜ் அறிவித்துள்ளார்.
அவரினால் வெளியிடப்பட்டுள்ள விபர அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பிரிவில் முதலாமிடத்தினை இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயமும், இரண்டாமிடத்தை பூவரசன்குளம் மகாவித்தியாலயமும் மூன்றாமிடத்தினை வவுனியா இந்துக்கல்லூரியும் பெற்றுள்ளன.
வவுனியா கோட்ட மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் மூன்று பிரிவுகளிலும் வவுனியா சைவப் பிரகாச மகளிர் கல்லூரி முதலாமிடத்தினை பெற்று கோட்ட மட்ட வலைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளதாக கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜ் தெரிவித்தார்.
இந்த போட்டியில் 15 வயது பிரிவில் முதலாமிடத்தினை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியும் இரண்டாமிடத்தினை வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலயமும் மூன்றாமிடத்தினை அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயமும் அடைந்துள்ளன.
17 வயது பிரிவில் முதலாமிடத்தினை சைவப்பிரகாச மகளிர் கல்லூரியும் இரண்டாமி;டத்தினை இறம்பைக்குளம் மகளிர் மாகவித்தியாயலமும் மூன்றாமிட்தினை நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலமும் பெற்றுள்ளன
இதேவேளை 19 வயது பிரிவில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி முதலாமிடத்தினையும் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.