தம்மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை கண்டித்து முஸ்லிம்கள் இன்று நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த தகவல்களின்படி மன்னார், வவுனியா அம்பாறை போன்ற இடங்களில் முஸ்லிம்களின் வியாபாரத்தளங்கள் மூடப்பட்டுள்ளன
எனினும் மன்னாரிலும் வவுனியாவிலும் இயல்புநிலையில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை
அம்பாறையில் இந்த நிர்வாக முடக்கல் காரணமாக சில இடங்களில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவிக்கிறார்.
எனினும் கொழும்பில் 75 வீதமான முஸ்லிம் வியாபாரத்தளங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கண்டியில் இயல்புநிலையில் பாதிப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.