குறுகிய அரசியல் லாபத்திற்காக இனவாதத்தை பரப்பும் அமைப்பு மற்றும் மனிதர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் போது நேற்று வடக்கு கிழக்கு மக்களுக்கான காணி உறுதி பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் உரிமையுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
[MP3]t55958[/MP3]
இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு இங்கு எல்லா உரிமையும் உள்ளது. இவர்களுக்கு என்று தனி ஒரு நாடு கிடையாது. இலங்கையில் பிறந்த அனைவரும் இலங்கையர்களே. அவர்கள் யாரும் வாடகைக்காரர்கள் அல்ல. அனைவரும் உரிமையாளர்களே.