சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் மூடும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக மாணவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட மத்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் பொருட்டு திருச்சி கல்லூரி மாணவர்கள் இணைந்து, அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் காந்தி வழியில் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாகவும் மாணவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.