பகிடிவதை சம்பங்களில் ஈடுப்படுபவர்களுக்கு 5 வருடங்களுக்கு வகுப்பு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் பொருட்டு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் ஆங்காங்கே சில குழுக்களால் பகிடிவதை இடம்பெறுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும், பாதுகாப்பு பிரிவினரும் அவதானித்து அவருவதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.