போதை மருந்து கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த பிரித்தானிய பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்தோனேசிய நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதனை பாலி உயர்நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
போதை மருந்து கடத்தல் சம்வத்துடன் தொடர்புடைய இந்த பெண்ணுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம் என அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் பரிந்துரைத்தனர்.
எனினும் பாலி நீதிபதிகள் அவருக்கு மரண தண்டனை விதித்தது தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில், குறித்த பெண் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்றம் அவரது முறையீட்டை நிராகரித்ததுடன் அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.