பண்டிகைக்காலத்தின் பின்னர் மொத்த சந்தைகளில் மரக்கறி விற்பனை நடவடிக்கைகள் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மெனிங் சந்தை உள்ளிட்ட நாட்டில் உள்ள பல சந்தைகளில் இந்த நிலமை நேற்றும் இன்று காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்றைய தினம் சந்தைக்கு எடுத்துவரப்பட்ட மரக்கறி வகைககள் பாரியளவு விற்கமுடியாத நிலை ஏற்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட சுமார் 50 கிலோகிராம் மரக்கறிகள் விற்கமுடியாத நிலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.