பாக்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் சிறைகாவல் வைக்கப்பட்டுள்ள வீட்டின் அருகில் இருந்து, வெடி குண்டுகளுடன் கூடிய காரை காவல்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர்.
கடந்த 1999 முதல் 2008 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் ஜனாதிபதியாக ஆட்சி செய்த பர்வேஸ் முஷாரப் பல்வேறு சட்ட மீறல்களை மேற்கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள வீட்டின் அருகில் இருந்து பாரிய வெடிகுண்டுகளுடனான கார் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.