லைபீரிய விபத்தில் 40 பேர் பலி

Friday, 26 April 2013 - 9:49

%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+40+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஆப்ரிக்க நாடான லைபீரியாவில், குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 40 பேர் வரையில் பலியாயினர். 

மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் இந்த அனர்ந்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குறித்த கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சுமார் 40 பேர் வரையில் சிக்குண்டு பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எனினும் இதுவரையில் ஐந்து சடலங்கள் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளன.

மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.