தென்சூடானைச் சேர்ந்த 3 ஆயிரம் போராட்டக்காரர்கள் தங்களது ஆயுதங்களை கையளித்துள்ளனர்.
இந்த ஆயுதங்களை கையளித்த போராட்டக்காரர்கள் தென்சூடான் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்துள்ளனர்.
சுமார் 100 ட்ரக் ரக வாகனங்களில் இந்த ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்சூடானில் விடுதலை இராணுவம் என்ற பெயரில் செயற்பட்ட போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சரணடைந்துள்ளனர்.