இந்திய பிரிமியர் லீக் போட்டியொன்றில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் சென்னை அணி மெதுவான ஓவர் தரத்துடன் செயற்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
போட்டி நிறைவடைந்த போது, இரண்டு ஓவர்கள் பின்னிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இருந்தாக தெரிவித்தே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, அணித் தலைவர் மஹேந்திர தோனிக்கு 20 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமான காலம் முதல் முதன் முறையாக மஹேந்திர சிங் தோனி, போட்டி சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்று நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் மஹேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை அணி 14 ஓட்டங்களினால் கொல்கத்தா அணியை வெற்றிகொண்டது.