Update :வசீம் தாஜூதீன் கொலை - கைது செய்யப்பட்ட முன்னாள் DIG அனுர சேனாநாயக்க விளக்கமறியலில்...

Monday, 23 May 2016 - 16:11

Update+%3A%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+DIG+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல்மாகாண பிரிவுக்கான முன்னாள் சிரேஸ்ட காவல்துறை மா அதிபர், அனுர சேனாநாயக்க எதிர் வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு பிரதான நீதவான் முன் இன்று முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
............................
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் மேல்மாகாண பிரிவுக்கான முன்னாள் சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

தாஜூதீன் கொலை தொடர்பில் இவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்தே அவர் குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் சாட்சிகளை மறைந்தமை தொடர்பிலேயே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனுர சேனநாயக்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips