கொரோனா காரணமாக நாட்டில் இறுதியாக உயிரிழந்த நபர் தொடர்பில் வெளியான தகவல் (காணொளி)

Monday, 25 May 2020 - 20:42

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது.

குவைத்திலிருந்து நாடுதிரும்பிய திருகோணமலை மங்கி ப்ரிட்ஜ் இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அவர் கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டிருந்தமை பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு உயிரிழந்த அவர், பயாகலை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கடந்த 20 ஆம் திகதி 466 பேர் கொண்ட குழுவினருடன் அவர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம், திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவுள்ளன.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips