தாம் இந்திய அணித் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு மகேந்திர சிங் தோனியின் வகிபாகம் அதிகம் இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சமூகவளைத்தளம் ஒன்றில் இடம்பெற்ற காணொளி கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது விளையாட்டு தொடர்பில் மகேந்திர சிங் தோனி அவதானித்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 7 வருடங்கள் தமது விளையாட்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபையினாலும் கண்கானிக்கப்பட்டது.
மகேந்திர சிங் தோனியிடம் இருந்து நிறைய விடயங்கள் கற்றுக் கொண்டுள்ளதாகவும் விராட் கோலி கூறியுள்ளார்.
Follow US
Most Viewed Stories