சொந்த மகிழூந்துகளில் பயணிக்கும்போது முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் பபா பலியவடன தெரிவித்துள்ளார்.
முகக்கவசமானது தாக்கத்தை தடுப்பதற்கான ஒரு மூலோபாயமாக பயன்படுத்தப்படுகிறது.
அதனால், முழுமையான பாதுகாப்பு கிடைக்காது.
ஏனைய சுகாதார முறைமைகளையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
சொந்த மகிழூந்துகளில் தனியாக பயணிக்கும்போது, முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை.
அத்துடன், வீட்டில்; இருப்பவர்களுடன் சொந்த வாகனத்தில் பயணிக்கும்போதும் முகக்கவசங்கள் அணிய வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விளையாட்டு மற்றும் உடற் பயிற்சிகளில் ஈடுபடும் போது முக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் பபா பலியவடன தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories