2011 முதல் 2016 வரையில் கம்பஹா மாவட்ட சனச சங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 708 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நீதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த சங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் 6 பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் இன்றைய தினம் (11) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
காவற்துறையினர் நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களில் குறித்த சனச சங்கத்தில் இடம்பெற்ற நிதி மோசடியுடன் தொடர்புடையதாக அந்த சங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இன்றைய தினம் (11) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
காவற்துறையினர் நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களில் குறித்த சனச சங்கத்தில் இடம்பெற்ற நிதி மோசடியுடன் தொடர்புடையதாக அந்த சங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories