ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் உயிரை காவுவொண்ட கோர விபத்து.....! நெஞ்சை பதறவைக்கும் காணொளி

Sunday, 12 July 2020 - 16:22

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.....%21+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
வெயாங்கொட - மல்லேஹெவ வீதியில் கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளாகி இன்று பிற்பகல் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை பிள்ளைகளின் தாய் செலுத்தியுதுடன் அதில் அவரின் பிள்ளைகளும் மேலும் இரண்டு பேரும் பயணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வதுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் 40 வயதான தாயும் அவரது 9 வயதான மகனும் ஒன்றரை வயதான குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதில் படுகாயமடைந்த பெண்ணொருவர் வத்துபிட்டிய வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips