நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2816 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் லங்காபுர பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் தொடர்பை பேணியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் 292 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே 2816 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் லங்காபுர பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் தொடர்பை பேணியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் 292 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.