புளுமெண்டல் சஞ்சீவவின் மனைவி, மகன் மற்றும் நண்பர் ஒருவர் கைது

Monday, 21 September 2020 - 16:03

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%2C+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பாதாள உலக குழு உறுப்பினர் புளுமெண்டல் சஞ்சீவவின் மனைவி அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் முகத்துவாரத்தில்; இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்கேத்திற்குரியவர்களிடம் இருந்து 30 கிராம் 322 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 5 கையடக்க தொலைபேசிகளும் 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புளுமெண்டல் சஞ்சீவவின் மனைவியான 42 வயதுடைய கீதா என அழைக்கப்படும் கீதாஞ்சலி அவரின் 20 வயதுடைய மகன் ஜனந்த மற்றும் அவருடைய நண்பரும் முகத்துவாரம் - சேனமுல்ல பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் உள்ள பெண்ணொருவருடன் இணைந்து சந்தேகத்திற்குரியவர்கள், ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர்த்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips