போலாந்து ஜனாதிபதிக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரது உடல் நிலை சீராக நிலவுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அவருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
போலாந்தில் கொவிட்-19 தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு 13 ஆயிரத்து 628 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் நேற்றைய தினமும் அங்கு 13 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய போலாந்தில் இதுவரையில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 318 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதோடு 4 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை சர்வதேச ரீதியில் 4 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 837 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் சர்வதேச ரீதியாக 11 லட்சத்து 50 ஆயிரத்து 284 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும் தொற்றுறுதியான 3 கோடியே 14 லட்சத்து 63 ஆயிரத்து 75 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories