கொவிட்19 நோயுடன் அடையாளம் காணப்படுகின்றவரின் முதல் தொடர்பாளர் இனிவரும் காலங்களில் வைத்தியசாலைகளில் அல்லது விசேட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள்.
மாறாக அவர்கள் தங்களது வீடுகளில் இருந்தே சிகிச்சைப் பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் சவேந்திரசில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஆலோனைக்கு அமைய, தற்போதுவரை முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் முறைமையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த முடிவு ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய, இன்று முதல் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளர்களின் முதலாவது தொடர்பு நபர்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதுவரைக்காலமும், அவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களின் முதல் தொடர்பாளர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இனிவரும் காலங்களில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் முதல் தொடர்பாளர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அவர்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறாமல், அருகில் உள்ளவர்களுக்கும், நாட்டு மக்களுக்கு சுகாதார அச்சுறுத்தல் நிலை ஏற்படாத வகையில் செயற்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மாறாக அவர்கள் தங்களது வீடுகளில் இருந்தே சிகிச்சைப் பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் சவேந்திரசில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஆலோனைக்கு அமைய, தற்போதுவரை முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் முறைமையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த முடிவு ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய, இன்று முதல் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளர்களின் முதலாவது தொடர்பு நபர்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதுவரைக்காலமும், அவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களின் முதல் தொடர்பாளர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இனிவரும் காலங்களில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் முதல் தொடர்பாளர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அவர்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறாமல், அருகில் உள்ளவர்களுக்கும், நாட்டு மக்களுக்கு சுகாதார அச்சுறுத்தல் நிலை ஏற்படாத வகையில் செயற்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories