கொழும்பு பங்குச் சந்தை பரிவர்தனைகள் தொலைநிலை செயற்பாட்டு ரீதியில் வெற்றி

Monday, 26 October 2020 - 19:08

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
கொவிட்-19 பரவல் காரணமாக, கொழும்பு பங்குச் சந்தை இன்று முழுமையாக தொலைநிலை செயற்பாட்டு ரீதியில் வெற்றிகரமாக இயங்கியுள்ளது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் சந்தை இடையீட்டாளர்கள் பங்குச் சந்தையினை தொலையியக்கியூடாக வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தாக கொழும்பு பங்குச் சந்தை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை காரியாலயம் மற்றும் அநேக சந்தை இடையீட்டாளர் நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ளன.

இதன் காரணமாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் சந்தை இடையீட்டாளர்கள் சந்தைச் செயற்பாடுகளை வழமைப்போல ஆனால் முழுமையாக தொலையியக்கியூடாக செயற்படுத்தியிருந்தன.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் எண் மின்நிலைப்படுத்துதலைத் தொடர்ந்து, வியாபாரம் தொடர்ந்தியங்கும் செய்முறையின் ஓர் அங்கமாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை பங்குத்தரகர் நிறுவனங்களுடன் இணைந்து அனைத்து வியாபார செய்முறைகளையும் தொலையியக்கியூடாக நடத்துதலை உறுதிப்படுத்துவதற்காக வியாபார தொடர்ந்தியங்கும் செய்முறையினை நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips