திருகோணமலை-திருக்கடலூர் பகுதியில் இருந்து இன்று (25) அதிகாலை படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீன்பிடிப்பதற்காக சிறிய படகொன்றின் மூலம் நான்கு பேர் கடலுக்குச் சென்றுள்ளதாகவும், அவர்களில் ஒருவரே குறித்த படகு விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை- திருக்கடலூர் ஹர்தாஸ் வத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த மீனவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மீன்பிடிப்பதற்காக சிறிய படகொன்றின் மூலம் நான்கு பேர் கடலுக்குச் சென்றுள்ளதாகவும், அவர்களில் ஒருவரே குறித்த படகு விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை- திருக்கடலூர் ஹர்தாஸ் வத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த மீனவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.