மொரட்டுவை - எகோடஉயன - புதிய காலி வீதியிலுள்ள வீதிக்கடவையில் ஏற்பட்ட விபத்தில் குழந்தையும் சிறுமியும்; மரணித்தனர்.
நேற்றிரவு 10 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கர்ப்பிணி தாய் ஒருவர் தமது ஒரு வயது குழந்தை மற்றும் 7 வயது உடைய சிறுமியுடன் வீதியை கடக்க முற்பட்ட போது உந்துருளி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகினர்.
சம்பவத்தில் காயமடைந்த கர்ப்பிணி தாய், குழந்தை மற்றும் சிறுமியும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையும் சிறுமியும் மரணித்தனர்.
காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த கர்ப்பிணி தாய் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளியை செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
நேற்றிரவு 10 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கர்ப்பிணி தாய் ஒருவர் தமது ஒரு வயது குழந்தை மற்றும் 7 வயது உடைய சிறுமியுடன் வீதியை கடக்க முற்பட்ட போது உந்துருளி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகினர்.
சம்பவத்தில் காயமடைந்த கர்ப்பிணி தாய், குழந்தை மற்றும் சிறுமியும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையும் சிறுமியும் மரணித்தனர்.
காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த கர்ப்பிணி தாய் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளியை செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories