இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் அதுசார்ந்த பொறுப்புக்கூறல் விடயங்களை வலியுறுத்தி, சர்வதேச தரப்புக்கு மேலும் இரண்டு கடிதங்களை தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளும், சிவில் சமுகங்களும் இணைந்து அனுப்பவுள்ளன.
இதற்கான இணக்கப்பாடு குறித்த தரப்புகளுக்கு இடையில் ஏற்கனவே எட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, இலங்கை சம்மந்தமான பொறுப்புக்கூறல் விடயங்களை மனித உரிமைகள் பேரவையில் இருந்து ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளருக்கு பாரப்படுத்துமாறும், போர்க்குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கான ஆதாரங்களை திரட்டுவதற்கான குறுங்கால பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் கோரி, தமிழ் கட்சிகளும், சிவில் சமுக அமைப்புகளும் இணைந்து மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பி வைத்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பவற்றுடன் பல்வேறு சிவில் சமுக அமைப்புகளும் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டிருந்தன.
அதேபோன்று ஐக்கிய நாடுகளின் பொதுசபை, பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கும் இவ்வாறான இரண்டு கடிதங்களை பிரத்தியேகமாக அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், போர்க்குற்ற விசாரணைகளுக்கான வலியுறுத்தல்களை மைய நோக்காகக்கொண்டு இந்த கடிதங்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதும், அந்த செயன்முறைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் பின்வாங்கி வருவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கான இணக்கப்பாடு குறித்த தரப்புகளுக்கு இடையில் ஏற்கனவே எட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, இலங்கை சம்மந்தமான பொறுப்புக்கூறல் விடயங்களை மனித உரிமைகள் பேரவையில் இருந்து ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளருக்கு பாரப்படுத்துமாறும், போர்க்குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கான ஆதாரங்களை திரட்டுவதற்கான குறுங்கால பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் கோரி, தமிழ் கட்சிகளும், சிவில் சமுக அமைப்புகளும் இணைந்து மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பி வைத்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பவற்றுடன் பல்வேறு சிவில் சமுக அமைப்புகளும் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டிருந்தன.
அதேபோன்று ஐக்கிய நாடுகளின் பொதுசபை, பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கும் இவ்வாறான இரண்டு கடிதங்களை பிரத்தியேகமாக அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், போர்க்குற்ற விசாரணைகளுக்கான வலியுறுத்தல்களை மைய நோக்காகக்கொண்டு இந்த கடிதங்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதும், அந்த செயன்முறைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் பின்வாங்கி வருவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
Follow US
Most Viewed Stories