தொற்றுறுதியான அருந்திக பெர்ணான்டோவுடன் தொடர்பைப் பேணியவர்கள் எவரும் நாடாளுமன்றத்தில் இல்லை என உறுதி!

Wednesday, 27 January 2021 - 17:02

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%21
கொரோனா வைரஸ் தொற்றுறுதியான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ, கடந்த 19ஆம், 20ஆம் திகதிகளிலோ அல்லது அதன் பின்னரோ நாடாளுமன்றத்திற்கு வருகைதரவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

படைக்கள சேவிதர் நரேந்ர பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தினார்.

எனவே, நாடாளுமன்றத்தில் அவருடன் தொடர்பை பேணியவர்கள் எவரும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியிருக்கவில்லை என படைக்கள சேவிதர் நரேந்ர பெர்ணான்டோ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் தமக்கு தொற்றுதியாகியதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips