அமெரிக்காவில் மூன்று நாட்களில் 4 பேர் சுட்டுக் கொலை!

Monday, 22 February 2021 - 13:06

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%21

அமெரிக்காவில் அண்மைய காலமாக துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி உள்ளது.

இதனால் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூ ஏர்லியன்ஸ் நகரில்நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மிசோரி மாநிலத்தில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் அங்கு பதற்றம் உருவாகியுள்ள நிலையில்காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

எனினும், இச்சம்பவஙக்ள் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips