அமெரிக்காவில் அண்மைய காலமாக துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி உள்ளது.
இதனால் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூ ஏர்லியன்ஸ் நகரில்நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மிசோரி மாநிலத்தில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் அங்கு பதற்றம் உருவாகியுள்ள நிலையில்காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
எனினும், இச்சம்பவஙக்ள் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
Follow US
Most Viewed Stories