2 மாத சிசு கொரோனாவினால் உயிரிழப்பு!

Sunday, 07 March 2021 - 19:52

2+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்ட 7 வாரங்களான குழந்தை ஒன்று பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்தது.

அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் ஜி.விஜேசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

நுரையீரலில் ஏற்பட்ட நோய்நிலைமை காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த குழந்தைக்கு கொவிட் 19 தொற்றுறுதியானமை தெரியவந்தது.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் பின்னர் பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை உயிரிழந்தது.

அந்த குழந்தையின் தாய்க்கும் கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips