மீண்டும் திருமதி இலங்கை அழகியாக முடி சூடும் புஷ்பிகா (காணொளி)

Monday, 05 April 2021 - 15:52

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29

2020 ஆம் ஆண்டின் திருமதி இலங்கை அழகியாக புஷ்பிகா டி சில்வா மீண்டும் முடிசூட்டப்படவுள்ளார்.

இதற்கமைய நாளைய தினம் திருமதி இலங்கை அழகியாக அவர் முடிசூட்டப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று நடைபெற்ற 'திருமதி இலங்கை' அழகிப் போட்டி நிகழ்ச்சியில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

போட்டியாளர் இலக்கம் 20, திருமதி புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, நிகழ்வின் பிரதம விருந்தினரால் முடிசூட்டி கௌரவிக்கப்பட்டார்.

பிரதம விருந்தினரால் கிரீடம் வழங்கப்பட்ட பின் முன்னாள் திருமதி அழகி கரோலின் ஜூரி, வெற்றி பெற்ற போட்டியாளர் அதற்கு தகுதியற்றவரென அறிவித்ததோடு வெற்றியாளரது கிரீடத்தையும் கழற்றினார்.

போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதோடு விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என்பதே அதற்கான காரணமாகும் எனவும் அவர் அறிவித்தார்.

இதனையடுத்து கிரீடம் வழங்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அத்துடன் இந்த போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட 17 ஆம் இலக்க போட்டியாளருக்கு திருமதி இலங்கை அழகிக்கான கிரீடம் சூட்டப்பட்டது.

எனினும் புஷ்பிகா டி சில்வா, விவாகரத்து பெற்றவர் என உறுதி செய்வதற்கான எழுத்துமூல ஆவணம் இல்லை என்பதால் மீண்டும் அவர் திருமதி இலங்கை அழகியாக மூடிசூட்டப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், கிரீடத்தை இழந்த புஷ்பிகா டி சில்வா, ஊடக சந்திப்பொன்றை நடத்தி இது குறித்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், புஷ்பிகா டி சில்வா தான் அணிந்திருந்த கிரீடத்தை காப்பாற்ற முயன்றபோது ஏற்பட்ட காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கறுவாத்தோட்டம் காவல்நிலையத்தில் அவர் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips