யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு நேற்றைய தினம் கொவிட் -19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில் நேற்றைய தினம் 760 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் 26 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டது.
அவர்களில் யாழ்ப்பாணத்தில் 24 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் ஒருவருக்கு தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 22 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை மற்றும் முல்லைத்தீவிலும் இரண்டு பேருக்கு நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில் நேற்றைய தினம் 760 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் 26 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டது.
அவர்களில் யாழ்ப்பாணத்தில் 24 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் ஒருவருக்கு தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 22 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை மற்றும் முல்லைத்தீவிலும் இரண்டு பேருக்கு நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories