நாளை அனைத்து வங்கிகளும் திறக்கப்பட்டிருக்கும்!

Sunday, 11 April 2021 - 8:47

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%21
சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹர ஆகிய அலுவலகங்களின் சேவைகள் நாளைய தினம் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அன்றைய தினத்திற்கான நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களுக்கான சேவைகள் மாத்திரமே இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம், குருநாகல், கம்பஹா, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை அலுவலகங்களில் நாளைய தினத்திற்காக நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களுக்கான சேவைகள் இடம்பெறும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாளைய தினம் விசேட அரச விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips