மதுபோதையில் வாகனம் செலுத்திய 783 பேர் கைது!

Friday, 16 April 2021 - 14:31

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+783+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட காவல்துறை சுற்றிவளைப்புகளில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 783 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்திரை புத்தாண்டு தினத்தன்று, காலை 9 மணிமுதல் நேற்று காலை 6 மணிவரையில், இந்த விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, வேறு போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில், 2,844 சாரதிகளுக்கு எதிராக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதேநேரம், 534 உந்துருளிகள், 43 சிற்றூர்ந்துகள், 180 முச்சக்கரவண்டிகள், 2 பேருந்துகள் என்பன காவற்துறையினால் கையகப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips