கொத்மலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் பாதிப்பு!

Thursday, 22 April 2021 - 16:46

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF+20+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21+
கொத்மலையில், குளவி கொட்டுக்கு இலக்காகி, 20 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொத்மலை, வெதமுல்ல - லிலிஸ்லேண்ட் தோட்டத்தில், இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 ஆண் தொழிலாளர்களும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், 16 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், நான்கு பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips