சுதந்திர தினத்திற்கு முன்னர் 160 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்துவது புதிய இலக்காகும் - ஜோ பைடன்

Wednesday, 05 May 2021 - 9:57

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+160+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+
அமெரிக்காவில் எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் 18 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்துவதற்கான திட்டத்தை அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் வகுத்துள்ளார்.

சுதந்திர தினத்திற்கு முன்னர் 160 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்துவது புதிய இலக்காகும் என ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அமெரிக்காவில் இதுவரையில் 105 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அங்கு நாளாந்தம் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறயினும் தடுப்பூசி செலுத்தும் விகிதம் மூன்று வாரங்களுக்கு முன்பு காணப்பட்டதை விடவும் தற்போது குறைந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips