இந்தியாவில் 18 வயது முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட 900,000 அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
12 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நேற்றைய தினம் 19 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் அங்கு தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தமிழகத்தில் இன்றைய தினம் 24 ஆயிரத்து 898 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் 195 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
12 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நேற்றைய தினம் 19 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் அங்கு தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தமிழகத்தில் இன்றைய தினம் 24 ஆயிரத்து 898 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் 195 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow US
Most Viewed Stories