நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

Sunday, 09 May 2021 - 13:10

%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

இந்தியாவின் தற்போதைய நிலைக்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என பிரித்தானியாவின் லென்செட் மருத்துவ இதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலின் முதலாம் அலையை கட்டுப்படுத்த இந்தியா சிறப்பாக செயற்பட்ட போதும், நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் நடவடிக்கையால் தற்போது அந்த நிலைமை சீர்குழைந்துள்ளதாக குறித்த இதழின் புதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கொவிட்-19 பரவல் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியின் செயற்பாடுகளை மன்னிக்க முடியாது. 

அதேநேரம் இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 409,300 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் 4, 133 மரணங்களும் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி இந்தியாவில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 22,295,000 ஐ கடந்துள்ளது.

பதிவாகியுள்ள கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கையும் 242,398 ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் இருக்க இந்திய அரசாங்கம் விசேட நடைறைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips