பொரளையில் உள்ள 'ஓல் செயின்ட்ஸ்' தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரே இவ்வாறு பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் கைதானதாக காவல்துறையினர் நேற்று முன்தினம் அறிவித்தனர்.
அத்துடன் இதற்கு முன்னர் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் கைது நடவடிக்கைகள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்பிலும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
எவ்வாறாயினும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அவரது குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரே இவ்வாறு பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் கைதானதாக காவல்துறையினர் நேற்று முன்தினம் அறிவித்தனர்.
அத்துடன் இதற்கு முன்னர் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் கைது நடவடிக்கைகள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்பிலும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
எவ்வாறாயினும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அவரது குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories