உக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை வெளியேறுமாறு அமெரிக்கா அறிவிப்பு

Monday, 24 January 2022 - 7:37

%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
உக்ரைனில் பதற்றமான சூழல் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள தமது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை வெளியேறுமாறு அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சூழலில் அமெரிக்கா இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.

அதேநேரம், அத்தியாவசியமற்ற ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ள நிலையில், அங்குள்ள அமெரிக்கர்கள் வெளியேறுவது தொடர்பில் பரிசீலிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

உக்ரைன் எல்லைப் பிராந்தியத்தில் ஒரு இலட்சம் ரஷ்ய துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யா உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips