காங்கேசன்துறையில் 5 இந்திய படகுகள் இன்று ஏலம்

Tuesday, 08 February 2022 - 19:32

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+5+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்தியப் படகுகள் இன்றும் ஏலம் விடப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், 4 இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், காரைநகரில் நேற்றையதினம் 135 இந்தியப் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

அதன்மூலம், அரசாங்கத்திற்கு 52 இலட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபா வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை அண்மையில் விடுவிக்கப்பட்ட 56 தமிழக மீனவர்களும் எதிர்வரும் 9ஆம் திகதிக்குப் பின்னர் நாடுகடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips