யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்பை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில், பல நாடுகள் தங்களது பிரஜைகளை உடனடியாக யுக்ரேனை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா, அயர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பேக், கனடா, நோர்வே, எஸ்ரோனியா, லித்துவேனியா, பல்கேரியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளன.
பிரான்ஸ் தனது பிரஜைகளை யுக்ரேனின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ள போதிலும் நாட்டை விட்டு வெளியேறும் இதுவரையில் அறிவுறுத்தவில்லை.
யுக்ரேனின் எல்லையுடன் உள்ள ரோமானியா, பயணங்களை தவிர்க்கும்மாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், யுக்ரேனில் உள்ள ரஷ்ய தூதுவராலயத்தில் உள்ள சில பணியாளர்களை மீள திரும்பும்படி ரஷ்யா பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா, அயர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பேக், கனடா, நோர்வே, எஸ்ரோனியா, லித்துவேனியா, பல்கேரியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளன.
பிரான்ஸ் தனது பிரஜைகளை யுக்ரேனின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ள போதிலும் நாட்டை விட்டு வெளியேறும் இதுவரையில் அறிவுறுத்தவில்லை.
யுக்ரேனின் எல்லையுடன் உள்ள ரோமானியா, பயணங்களை தவிர்க்கும்மாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், யுக்ரேனில் உள்ள ரஷ்ய தூதுவராலயத்தில் உள்ள சில பணியாளர்களை மீள திரும்பும்படி ரஷ்யா பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories