நோர்வூட், பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பாடசாலையின் ஆசிரியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த மாதம் 26ஆம் திகதி பாடசாலையின் வகுப்பறைக்கு இனந்தெரியாத குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக பாடசாலையின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்கள் என்பன அழிவடைந்துள்ளன.
இது தொடர்பில், காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு முறைப்பாடும் எழுத்துமூலம் கிடைக்கப்பெறவில்லை என நோர்வூட் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி பாடசாலையின் வகுப்பறைக்கு இனந்தெரியாத குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக பாடசாலையின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்கள் என்பன அழிவடைந்துள்ளன.
இது தொடர்பில், காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு முறைப்பாடும் எழுத்துமூலம் கிடைக்கப்பெறவில்லை என நோர்வூட் காவல்துறை தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories