இலங்கையின் நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றில் விளக்கம் அளிக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

Monday, 13 June 2022 - 13:36

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
இலங்கையின் நெருக்கடி நிலைமை தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், அந்த நாட்டின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு விளக்கமளிக்கவுள்ளார்.

இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமை, அதற்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது இந்திய வெளிவிவகார அமைச்சரினால் விளக்கமளிக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் இலங்கைக்கு எந்தவகையான உதவிகளை வழங்க முடியும் என்பது தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை இந்த குழு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips